search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியை பலி"

    • மதனபுரம் அருகில் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி உயிரிழந்தார்.

    தாம்பரம்:

    தாம்பத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர், பார்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 50). இவர் படப்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக தனது மகள் தீபிகா (வயது 21) உடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

    மதனபுரம் அருகில் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பகுதியை கடக்க முயற்சி செய்த போது வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி மீது பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின் பின் டயர் ஏறி இறங்கிதில் படுகாயம் அடை ந்தார். தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி உயிரிழந்தார்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஷகிலா நிறைமதிக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஷகிலா நிறைமதியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் ஷகீலா நிறைமதி (59). இவர் திருவள்ளூர் அடுத்த ராம தண்டலம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கணவரிடம் விவாகரத்து பெற்று மகன் நவீனுடன் (29) தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் ஷகீலா நிறைமதி, தனது மகன் நவீனுடன் மோட்டார் சைக்கிளில் மணவாளநகர் வெங்கத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். வெங்கத்தூர் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் வேகத்தடையின் மீது ஏறி இறங்கியது. அப்போது பின்னால் அமர்ந்து இருந்த ஷகிலா நிறைமதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் ஷகிலா நிறைமதிக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷகிலா நிறைமதி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×